Wednesday, August 3, 2016

தமிழ் மாறனின் மகன்

வெட்டு உடைந்த தேகம்
உன் அரிவாள் தீண்டி படர
விழுந்தது நானா இல்லை என்னை கருத்தரித்த என் தகப்பனா

கபாலி....
வென்றது நீயும் இல்லை
தோற்றது என் தகப்பனும் அல்ல...
வீழ்ந்தது நான் மட்டுமே...

துரோகி அவன் என்றால்...
நண்பன் அவன் இல்லையா....
பித்தம் யாருக்குதான் தலைகேறவில்லை...
நீ கபாலி தானே...
அறியாதது உன் தவறடா.. மடையா

அரக்கனான அப்பனை நினைக்கமுடியாதடா..
கிறுக்கனாய் தான் அவன் சரிந்து போனானடா....
உன் கால் பங்கு வயதான எனக்கு தெரிந்தது உனக்கு எட்டவில்லையா...

ஏனடா  மாரில் சாய்த்ததை..
சிறிதாய் கனிந்து...
அவன் காலில் சாய்த்திருந்தால்.....
தவறறிந்து உனக்கு ஏழுஜென்மத்து அடிமையாய் தொழுதிருப்பானே..
என் விதியயை இப்படி எரித்தும் புதைத்தும் சிதைத்திருப்பாயா...

நான் துரோகியின் மகனாய் புதைந்தாலும்
உன் சிரிப்பில் நான் பாவம்  மட்டுமே காண்பெண்...
உன் துயரத்தில் என் சாபம் மட்டுமே காண்பெண்...
கபாலி மறந்துவிடாதே நான் தமிழ்மாறனின் மகன்...

என்  அப்பன்  உன்னை  கோபித்து  என்ன  பயன்
தாபித்து  போனது  நான்  தானே ...
உன்னை  வெறுக்க  மட்டுமே  முடியும்  என்னால் ...
என்னால்  தடுக்க  முயலாமல்   போன   கோபத்தை ...
வெறுக்க  கூட  முடியமால்  போனேனே  நானும்


No comments:

Post a Comment